இந்தியா

கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன்

கலவர வழக்கு ஒன்றில் ஆஜராக தவறிவதற்காக கைது செய்யப்பட்ட தில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கு ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

PTI

கலவர வழக்கு ஒன்றில் ஆஜராக தவறிவதற்காக கைது செய்யப்பட்ட தில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கு ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தில்லியில் 2013-ஆம் ஆண்டில் நடைபெற்ற கலவர வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாடல் டவுன் சட்டப்பேரவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அகிலேஷ் திரிபாதி நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அகிலேஷ் திரிபாதிக்கு இன்று ஜாமீன் வழங்கி பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கபில் குமார், ஜாமீன் வழங்கினார்.

முன்னதாக, இதே வழக்கில் ஜாமீன் பெற்றிருந்த திரிபாதி, தனக்கு வழங்கப்பட்ட சலுகைகளை முறைகேடாகப் பயன்படுத்தி, கோர்ட்டில் ஆஜாராகமல் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு ஜாமீனில் வர முடியாத பிடி ஆணை பிறப்பித்து நீதிபதி கபில் குமார் உத்தரவிட்டார். பின்னர் போலீஸார் திரிபாதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

ஆம் ஆத்மி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு சிறை சென்ற 5-ஆவது எம்எல்ஏ அகிலேஷ் திரிபாதி ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT