இந்தியா

பிகார்: பட்டப்பகலில் வங்கியில் ரூ.30 லட்சம் கொள்ளை

பிகார் மாநிலம் நலந்தா மாவட்டம் சோஹ்சாரி காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வந்த தேசிய வங்கி ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

PTI

பிகார் மாநிலம் நலந்தா மாவட்டம் சோஹ்சாரி காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வந்த தேசிய வங்கி ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்த் கூறுகையில், மோட்டார் சைக்கிளில் வந்த 3 முகமூடிக் கொள்ளையர்கள், வங்கிக்குள் புகுந்து, அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

வங்கி ஊழியர்களின் செல்போன்களைப் பிடுங்கி தண்ணீரில் போட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT