அகமதுநகர் : பெண்கள் நுழைய இருந்த தடை, அதாவது சுமார் 400 ஆண்டுகால வழக்கம் தளர்த்தப்பட்டதை அடுத்து, சிங்ணாப்பூர் சனி பகவான் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பூமாதா அமைப்பினர் நடத்திய போராட்டத்தை அடுத்து, கோயில் நிர்வாகம் இந்த முடிவை நேற்று அறிவித்தது.
இதையடுத்து, பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட பிறகு வரும் முதல் சனிக்கிழமை என்பதால், இன்று ஏராளமான ஆண்களும், பெண்களும் கோயிலுக்கு வந்து சனி பகவானை தரிசித்தனர்.
சனி பகவான் அமைந்திருக்கும் உயரமான மேடை மீது, ஆண்களும் பெண்களும் ஏறி சனி பகவானுக்கு எண்ணெய் ஊற்றி தங்களது பிரார்த்தனையை இனிதே நிறைவேற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.