புது தில்லி : தில்லியின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள ஃபிக்கி கட்டடத்தில் இன்று நள்ளிரவு நேரிட்ட மிகப் பயங்கர தீ விபத்தில், கட்டடத்தில் இருந்த தேசிய இயற்கை அருங்காட்சியகம் பெருத்த சேதமடைந்துள்ளது.
நேற்று நள்ளிரவு 1.45 மணியளவில் நேரிட்ட தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க 4 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடினர்.
மிக அடர்ந்த புகையில் சிக்கிய 6 தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த தீ விபத்தில், தேசிய அருங்காட்சியகத்தில் இருந்த மிகப் பழமையான, புராதன சிறப்பு வாய்ந்த பல பொருட்கள் தீக்கிரையானதாகத் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.