நேபாள நாட்டின் 39-வது பிரதமராக பிரசந்தா பொறுப்பேற்பு
நேபாள நாட்டின் 39-வது பிரதமராக மாவோயிஸ்ட் தலைவர் புஷ்ப கமல் தஹல் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
காத்மாண்டு: நேபாள நாட்டின் புதிய பிரதமராக மாவோயிஸ்ட் தலைவர் புஷ்ப கமல் தஹல் (பிரசந்தா)இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு அந்நாட்டு குடியரசுத் தலைவர் பித்யா தேவி பன்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நேபாளப் பிரதமராகப் பதவி வகித்து வந்த கே.பி.சர்மா ஓலி கடந்த மாதம் 24-ம் தேதி ராஜிநாமா செய்தார். இதையடுத்து, பிரதமர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வந்த நிலையில், மொத்தமுள்ள 573 வாக்குகளில் பிரசந்தாவுக்கு ஆதரவாக 363 வாக்குகளும், எதிராக 210 வாக்குகளும் பதிவாகின. இந்த தகவலை சபாநாயகர் ஓம்சாரி கர்த்தி முறைப்படி அறிவித்தார்.
நாடாளுமன்றத்தின் தனிப்பெரும் கட்சியான நேபாளி காங்கிரஸ், மதேசிகள் உள்பட, முக்கிய கட்சிகள் பிரசந்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இவர் நேபாள நாட்டின் 39-வது பிரதமர் ஆவார். இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement