அசாம் படல்பெத்தா கிராமத்தில் குண்டு வெடிப்பு
அசாம் மாநிலம் படல்பெத்தா என்ற கிராமத்தில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
படல்பெத்தா: அசாம் மாநிலம் படல்பெத்தா என்ற கிராமத்தில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அசாம் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்சுகியா மாவட்டத்தில் படல்பெத்தா தேயிலை தோட்டம் அருகே இன்று காலை 7.30 மணியளவில் இந்தக் குண்டு வெடித்துள்ளது.
இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்தால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement