புது தில்லி: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுலின் டிவிட்டர் கணக்குகளை மர்ம நபர்கள் முடக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
நேற்று இரவு ராகுலின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதாகவும், அப்போது, அந்த பக்கத்தில் ஆபாசமான சில வாக்கியங்கள் இடம்பெற்றிருந்ததாகவும், பிறகு அவை நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தில்லி காவல்துறையின் சைபர் செல்லுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.