இந்தியா

ராணுவ குவிப்பு இல்லை; வழக்கமான பயிற்சி தான்: மம்தா புகாருக்கு ராணுவம் பதில்

மேற்கு வங்கத்தில் ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறும் புகாரில் உண்மையில்லை என்றும், ராணுவ பயிற்சி மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

PTI


கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறும் புகாரில் உண்மையில்லை என்றும், ராணுவ பயிற்சி மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநில தலைமைச் செயலகம் அருகே ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதாகவும், சுங்கச்சாவடிகளில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியிருப்பதாவது, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ராணுவம் குவிக்கப்படவில்லை.  ராணுவத்தினர் தங்களது வழக்கமான பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். அவ்வளவே என்று பதில் அளித்துள்ளார்.

மேலும், சுங்கச் சாவடிகளில் பாதுகாப்புக்காக மட்டுமே ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இது தேவையில்லாமல் பிரச்னையாக்கப்படுவதாக பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்ன ஆனது? - குடும்பத்தினர் விளக்கம்!

தோல்வி எதிரொலி..! பாகிஸ்தான் கேப்டனின் குடும்பத்தை வசைபாடும் ரசிகர்கள்!

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

SCROLL FOR NEXT