இந்தியா

விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதாக மோடி உறுதி அளிக்கவில்லை: ராகுல்

விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதாக மோடி எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.


புது தில்லி: விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதாக மோடி எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை ராகுல், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

அது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய ராகுல், நாட்டில் பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வறட்சி காரணமாக ஏராளமான விவசாயிகள் கடன் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர். இதனால் விவசாயிகளின் தற்கொலைகளும் அதிகரித்துள்ளது. எனவே, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு வலியுறுத்தினேன்.

அனைத்துப் பிரச்னைகளையும் கேட்டுக் கொண்ட மோடி, விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது குறித்து உறுதி அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று மதியம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்துப் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிர் உலகக் கோப்பை: 129 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

காந்தி சிலைக்கு காவித்துண்டு: புதிய சர்ச்சை!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு: ஆந்திர முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து!

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் திருத்தேர் வைபவம்!

முதல் டெஸ்ட்: கே.எல்.ராகுல் அரைசதம்; வலுவான நிலையில் இந்தியா!

SCROLL FOR NEXT