முகப்பு
இந்தியா

தில்லி துப்புரவுத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்

நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, தில்லி மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை காலை வாபஸ் பெறப்பட்டது.

Updated On : 8 பிப்ரவரி, 2016 at 12:14 PM
பகிர்:

நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, தில்லி மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை காலை வாபஸ் பெறப்பட்டது.

இந்த விவகாரத்தில் தில்லி உயர் நீதிமன்றம் தலையிட்டு, ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததன் அடிப்படையில் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி. ரோஹினி மற்றும் நீதிபதி ஜெயந்த் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜனவரி மாத ஊதியத்தை உடனடியாக வழங்கவும், நிலுவைத் தொகையை இன்னும் இரண்டு நாட்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டதன் அடிப்படையில், தில்லி துப்புரவுத் தொழிலாளர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

Advertisement

மேலும், துப்புரவு தொழிலாளர்களின் கூட்டு இயக்கமானது, வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு, பணியைத் துவக்குவதாக நீதிபதிகளிடம் உறுதி அளித்துள்ளது.

நிலுவை ஊதியத்தை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லி மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் கடந்த கடந்த 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக, மாநகராட்சி மருத்துவர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.