முகப்பு
இந்தியா

உயிரோடு மீட்கப்பட்ட ராணுவ வீரருக்கு நினைவிழந்த நிலையில் சிகிச்சை: மருத்துவக் குழு

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்குப் பிறகு இன்று உயிரோடு மீட்கப்பட்ட ராணுவ வீரரின் உடல் நிலை மிக மிக கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On : 9 பிப்ரவரி, 2016 at 5:08 PM
பகிர்:

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்குப் பிறகு இன்று உயிரோடு மீட்கப்பட்ட ராணுவ வீரரின் உடல் நிலை மிக மிக கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர் லான்ஸ் நாயக் ஹனமந்தப்பாவின் உடல் நிலை மிக மிக கவலைக்கிடமாகவே இருப்பதாகவும், தற்போது அளித்து வரும் சிகிச்சையின் படி 24 முதல் 48 மணி நேரத்துக்குப் பிறகே எதுவும் கூற முடியும் என்றும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

அவர் தற்போது நினைவிழந்த நிலையிலேயே இருப்பதாகவும், அவரது ரத்த அழுத்தம் மிகக் குறைவாக இருப்பதாகவும் ஆர்.ஆர். மருத்துவமனையின் மருத்துவக் குழு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

முன்னதாக, மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம், வீரரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.