இந்தியா

மும்பை விமான நிலைய கட்டடத்தில் இருந்து குதித்து உக்ரேனிய தொழிலதிபர் தற்கொலை

மும்பை சர்வதேச விமான நிலையக் கட்டடத்தில் இருந்து குதித்து உக்ரேனியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

PTI

மும்பை சர்வதேச விமான நிலையக் கட்டடத்தில் இருந்து குதித்து உக்ரேனியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

மைகாய்லோ செக்ரைஜின் (32) என்ற தொழிலதிபர், சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் டி2 முனையத்தின் வாகன நிறுத்துமிடத்தின் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் விஷயமாக மும்பை வந்த தொழிலதிபர், தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

விமான நிலையத்தின் கண்காணிப்புக் கேமராவில், அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் காட்சி பதிவாகியுள்ளது.

உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT