முகப்பு
இந்தியா

அருணாசலப் பிரதேசம்: பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் கலிகோ புல்

அருணாசலப் பிரதேசத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் கலிகோ புல் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

Updated On : 25 பிப்ரவரி, 2016 at 8:20 PM
பகிர்:

அருணாசலப் பிரதேசத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் கலிகோ புல் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். அவருக்கு 40 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

அருணாசலப் பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்ததையடுத்து, அந்த மாநிலத்தின் 8-ஆவது முதல்வராக கலிகோ புல், கடந்த 19-ஆம் தேதி பதவியேற்றார்.

இந்நிலையில், அருணாசலப் பிரதேச சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை கூட்டவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் மாநில ஆளுநர் ஜோதிபிரசாத் ராஜ்கோவா உத்தரவிட்டார். இதையடுத்து இன்று பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

Advertisement

முகல்வர் கலிகோ புல்லுக்கு ஆதரவாக 27 காங்கிரஸ் அதிருப்தி உறுப்பினர்களும், 11 பாஜக உறுப்பினர்களும், இரு சுயேச்சை உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

நேற்று வரை முன்னாள் முதல்வர் நபம் துகிக்கு ஆதரவு அளித்த 9 காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று முதல்வர் கலிகோவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் 17 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதையடுத்து முதல்வர் கலிகோ நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.