ஷீனா போரா வழக்கில் திடீர் திருப்பம்: சாட்சியாக மாறிய கார் ஓட்டுநருக்கு பொது மன்னிப்பு
மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஷீனா போரா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி இந்திராணி முகர்ஜியின் கார் ஓட்டுநர் ஷியாம்வர் ரவி, சாட்சியமாக மாற அனுமதி அளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு பொது மன்னிப்பு வழங்குவதாகவும் அறிவித்தது.
மும்பை: மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஷீனா போரா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி இந்திராணி முகர்ஜியின் கார் ஓட்டுநர் ஷியாம்வர் ரவி, சாட்சியமாக மாற அனுமதி அளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு பொது மன்னிப்பு வழங்குவதாகவும் அறிவித்தது.
ஷீனா போரா கொலை வழக்கில் சாட்சியாக மாறுவதற்கும், தனக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரியும் ஷியாம்வர் ரவி தாக்கல் செய்த மனுவுக்கு சிபிஐ தரப்பு ஏற்கனவே அனுமதி அளித்தது.
இந்நிலையில், ஷியாம்ரவி சாட்சியமாக மாறுவதற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.எஸ்.மகாஜன் அனுமதி அளித்தார். மேலும், ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினார். அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தனர்.
Advertisement