இந்தியா

உத்ரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு: போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தம்

உத்ரகண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக  அப்பகுதியில் சாலை போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

IANS

டெராடூன்: உத்ரகண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக  அப்பகுதியில் சாலை போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நந்தபிரயாகில் உள்ள கேதார்நாத் நெடுஞ்சாலை மற்றும் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சாலைகளை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. புனித யாத்திரைக்கு வந்த பக்தர்கள் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த 72 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அல்மோரா, பூரி, உத்திரகாசி, டெராடூன், உதம்சிங்நகர், சம்பாவாட், நைனிடால் ஆகிய மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT