முகப்பு
இந்தியா

திருமண விழாவில் பங்கேற்று திரும்பும் போது ஏற்பட்ட சோகம்: சாலை விபத்தில் 5 பேர் பலி

பிகார் மாநிலத்தின் சிவான் மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட சாலைவிபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர்.

Updated On : 5 மார்ச், 2016 at 3:04 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:12 PM

பிகார் மாநிலத்தின் சிவான் மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட சாலைவிபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர்.

சனிபசந்த்பூர் கிராமத்தில் நடைபெற்ற உறவினரின் திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது படகோகான் கிராமம் அருகே வந்த கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாட்னா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவ இடத்தில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.