திருமண விழாவில் பங்கேற்று திரும்பும் போது ஏற்பட்ட சோகம்: சாலை விபத்தில் 5 பேர் பலி
பிகார் மாநிலத்தின் சிவான் மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட சாலைவிபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர்.
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:12 PM
பிகார் மாநிலத்தின் சிவான் மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட சாலைவிபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர்.
சனிபசந்த்பூர் கிராமத்தில் நடைபெற்ற உறவினரின் திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது படகோகான் கிராமம் அருகே வந்த கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாட்னா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவ இடத்தில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement