மேகாலயாவில் லேசான நிலநடுக்கம்
மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங் நகரில் இன்று பிற்பகல் இருமுறை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங் நகரில் இன்று பிற்பகல் இருமுறை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
பூமிக்கு கீழே 8 கிமீ ஆழத்தில் உருவான நிலநடுக்கம் முதலில் 3.16 மணிக்கு நிகழ்ந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவானது.
இதைத்தொடர்ந்து 4 நிமிஷங்களுக்குப் பிறகு இரண்டாவது நிலநடுக்கும் 9 கிமீ ஆழத்தில் நிகழ்ந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 பதிவானது.
Advertisement
இந்தியாவின் வடகிழக்கு பகுதி நிலநடுக்கப் பகுதிக்குள் வருவதால் இதுபோன்ற குறுகிய கால இடைவெளியில் நிலநடுக்கம் ஏற்படுவதாக தேசிய நிலநடுக்கவியல் துறை தலைவர் ஜே.எல்.கௌதம் கூறினார்.