முகப்பு
இந்தியா

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி32 ராக்கெட் : பிரதமர் பாராட்டு

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் என்ற வழிகாட்டி செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி 32 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார்.

Updated On : 10 மார்ச், 2016 at 5:49 PM
பகிர்:

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் என்ற வழிகாட்டி செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி 32 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார்.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறித்து பெருமை கொள்கிறோம். இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்புக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.

ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 4 மணியளவில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் என்ற வழிகாட்டி செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி 32 ராக்கெட் மூலமாக வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

Advertisement

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 5 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன.

இப்போது 1,425 கிலோ எடை கொண்ட 6-ஆவது செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப், பி.எஸ்.எல்.வி. சி32 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு விண்ணில் ஏவியது இஸ்ரோ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.