இந்தியா

எனது போராட்டம் வறுமைக்கு எதிராகத்தான்; கோகோய்க்கு எதிராக அல்ல: மோடி உரை

எனது போராட்டம் வறுமைக்கு எதிராகத்தானே தவிர அசாம் முதல்வர் தருண் கோகோய்க்கு எதிராக அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

IANS

எனது போராட்டம் வறுமைக்கு எதிராகத்தானே தவிர அசாம் முதல்வர் தருண் கோகோய்க்கு எதிராக அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, அசாம் சட்டப்பேரவைத் தேர்தலே எனக்கு எதிராகத்தான் என்று கோகோய் கூறியுள்ளார். ஆனால், எனக்கு அவருக்கு எதிராக போராட எதுவும் இல்லை. அதில்லாமல், நமது கலாச்சாரத்தில் வயதில் மூத்தவர்களுடன் சண்டையிடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. வயதில் மூத்தவர்களை மதிக்க வேண்டும் என்று பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், இந்தியா சுதந்திரம் பெற்ற போது, வளமான மாநிலமாக பிகார் திகழ்ந்தது. ஆனால், தற்போது ஏழை மாநிலங்களில் ஒன்றாகிவிட்டது.

நீர்வளம் மிகுந்த மாநிலத்தில், மக்கள் தண்ணீருக்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு காலம் ஆகியும், அசாமில் இன்னமும் 2000 கிராமங்களுக்கு மேல் மின்சார வசதி செய்து தரப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

முன்னதாக இந்த மாத துவக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கோகோய், அஸ்ஸாம் சட்டப் பேரவைத் தேர்தல் பிரதமர் நரேந்திர மோடிக்கும், எனக்கும் இடையிலான நேரடி மோதல் என்று கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு

ஜெயலலிதா பிறந்த நாள்: ஏழைகளுக்கு நல உதவி

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

SCROLL FOR NEXT