இம்பாலில் 2ம் உலகப் போரில் பயன்படுத்திய மோர்டர் ஷெல்கள் கண்டுபிடிப்பு
மணிப்பால் மாநிலம் சேனாபதி மாவட்டம் மோட்பங் என்ற பகுதியில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது என்று கருதப்படும் 3 மோர்டர் ஷெல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இம்பால் : மணிப்பால் மாநிலம் சேனாபதி மாவட்டம் மோட்பங் என்ற பகுதியில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது என்று கருதப்படும் 3 மோர்டர் ஷெல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிராமத்தில் பள்ளம் தோண்டும் போது கண்டுபிடிக்கப்பட்ட 3 மோர்டர் ஷெல்கள் குறித்து பொதுமக்கள் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து சென்ற காவல்துறையினர், அவற்றை கைப்பற்றி பாதுகாத்து வைத்தனர்.
Advertisement
இவை, 1944ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நடந்த போது பயன்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.