ஜம்மு: ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்திய பாதுகாப்பு நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 3 பேர் காயமடைந்தனர்.
இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகளை ஒட்டிய சம்பா, ரஜோரி பகுதியில் இந்திய பாதுகாப்பு நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
ஜம்மு மாவட்டம் அர்னியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ராம்காரில் பாகிஸ்தான் ராணுவம் மோர்ட்டார்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.