வந்தாச்சு இன்று முதல் ஏர்டெல்லின் பேமெண்ட் வங்கி!
வங்கித்துறையில் கால் பதிக்கவிருக்கும் தன்னுடைய திட்டத்திற்கு முன்னோடியாக, தன்னுடைய பேமெண்ட் வங்கி செயல்பாடுகளை ஏர்டெல் இன்று துவக்கியுள்ளது.
இந்தியாவந்தாச்சு இன்று முதல் ஏர்டெல்லின் பேமெண்ட் வங்கி!
வங்கித்துறையில் கால் பதிக்கவிருக்கும் தன்னுடைய திட்டத்திற்கு முன்னோடியாக, தன்னுடைய பேமெண்ட் வங்கி செயல்பாடுகளை ஏர்டெல் இன்று துவக்கியுள்ளது.
ஜெய்ப்பூர்: வங்கித்துறையில் கால் பதிக்கவிருக்கும் தன்னுடைய திட்டத்திற்கு முன்னோடியாக, தன்னுடைய பேமெண்ட் வங்கி செயல்பாடுகளை ஏர்டெல் இன்று துவக்கியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஏர்டெல் ஸ்டோர் ஒன்றில் இந்த சேவை முன்மாதிரி சோதனை வடிவத்தில் இன்று துவக்கப்பட்டது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஏர்டெல் பேமெண்ட் வங்கி என்பது ஏர்டெல்லின் துணை நிறுவனமாகும். ராஜஸ்தானில் உள்ள நகரங்கள் மற்றும் சிறு கிராமங்களில் உள்ள வாடிக்கையாளர்கள், இனிமேல் ஏர்டெல் ஸ்டோர்கள் மூலம் வங்கிக்கணக்குகளை துவக்க முடியும். இந்த ஏர்டெல் ஸ்டோர்கள் இனி வங்கி சேவை மையங்களாக செயல்படும்.
இவற்றின் மூலம் அடிப்படை மற்றும் எளிமையான வங்கி சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். மேலும் 10000 ஏர்டெல் ஸ்டோர்கள் மூலம் ஏர்டெல் வங்கி சேவையை விரிவு செய்யய உள்ளோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.