புது தில்லி: ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் செய்து வரும் அமளியால் இரு அவைகளும் முடங்கியுள்ளன.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கூடியதில் இருந்து, இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் செய்து வரும் அமளி காரணமாக எந்த அவை நடவடிக்கைகளும் நடைபெறாமல் பல முறை அவை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு எடுத்த இந்த நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.30 மணியளவில் அவசர ஆலோசனை நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.