முகப்பு
இந்தியா

குப்வாராவில் பயங்கரவாத ஊடுருவலை முறியடித்தது ராணுவம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் தங்தார் பகுதியில் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிக்குள் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.

Updated On : 12 அக்டோபர், 2016 at 1:08 PM
பகிர்:


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் தங்தார் பகுதியில் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிக்குள் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.

தங்தார் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை அடுத்து, பயங்கரவாத ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஊடுருவல் முயற்சி நடந்த இடத்தில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுவதாகவும், மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.