முகப்பு
இந்தியா

அப்துல்கலாமின் 85-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி டிவிட்டரில் அஞ்சலி

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் ஏவுகணை மனிதர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 85-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Dinamani
Updated On : 24 ஜனவரி, 2024 at 6:29 PM
பகிர்:

புது தில்லி: இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் ஏவுகணை மனிதர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 85-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
ஒவ்வொரு இந்திய குடிமகன்களின் எண்ணங்களைக் கவர்ந்த நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் எனது மனமார்ந்த அஞ்சலிகளை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பத்ம பூஷன், பத்ம விபூஷன், பரத ரத்னா போன்ற உயர் விருதுகளைப் பெற்றவர். கடந்த 2002-ல் 11-வது குடியரசுத் தலைவராகி நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர் அப்துல் காலம். ஏவுகணை மனிதரான அப்துல்கலாம் நம்மோடு என்றும் வாழ்ந்து வருகிறார் என்று அவர் தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →