புது தில்லி: இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி முகமது அக்தர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்.
இந்தியாவின் ராணுவ ரகசியங்களை உளவுபார்த்து பாகிஸ்தானுக்கு தெரிவித்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவரை தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக பாகிஸ்தான் தூதருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.