காஷ்மீர் பிரிவினைவாதிகள் என்று சொல்லாதீர்கள்: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஹூரியத் தலைவர்களை பிரிவினைவாதிகள் என்று அழைக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் வழக்குரைஞர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
புது தில்லி: காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஹூரியத் தலைவர்களை பிரிவினைவாதிகள் என்று அழைக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் வழக்குரைஞர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹூரியத் தலைவர்களுக்கு மத்திய அரசின் நிதி செலவு செய்யப்படுவதையும், மத்திய அரசு பாதுகாப்பையும் நிறுத்த வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ஹூரியத் தலைவர்களினை பிரிவினைவாதிகள் என்று கூறக் கூடாது என்று வழக்குரைஞர்களுக்கு அறிவுறுத்தினர்.