முகப்பு
இந்தியா

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரக ஏவுகணை சோதனை வெற்றி

இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்ப உதவியோடு, இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த அதி நவீன ரக ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

Updated On : 20 செப்டம்பர், 2016 at 1:27 PM
பகிர்:


புவனேஷ்வர்: இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்ப உதவியோடு, இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த அதி நவீன ரக ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

நிலத்தில் இருந்து பாய்ந்து சென்று விண்ணில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை ஒடிசா மாநிலம் பலசோர் அருகில் உள்ள சந்திப்பூர் ஏவுகணை தளத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.

இதே வகையைச் சேர்ந்த 3 ஏவுகணைகள், கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்தியா ஏற்கனவே சோதித்து வெற்றி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இவை, இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டிருப்பதோடு, இந்த ஏவுகணையை தாக்க வரும் எதிரிகளின் ஆயுதங்களையும் அழிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.