முகப்பு
இந்தியா

ரயில்வேக்கு இனி தனி பட்ஜெட் கிடையாது: மத்திய அமைச்சரவை முடிவு

ரயில்வே துறைக்கு என இனி தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது என்ற முடிவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

Updated On : 21 செப்டம்பர், 2016 at 12:43 PM
railway_budget
பகிர்:


புது தில்லி: ரயில்வே துறைக்கு என இனி தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது என்ற முடிவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

வரும் நிதியாண்டு முதல் பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டையும் இணைத்துத் தாக்கல் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது.

தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், பொது பட்ஜெட்டை முன்னதாகவே தாக்கல் செய்யவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

இதன் மூலம், 2017 - 18ம் நிதியாண்டு முதல் பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டும் இணைத்து தாக்கல் செய்யப்படும். அதோடு, பொது பட்ஜெட் முன்னதாகவே தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.