ஹைதராபாத்தில் கன மழை: ராணுவத்தின் உதவி கோரப்பட்டது
ஆந்திர மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களை மீட்க தெலங்கானா அரசு ராணுவத்தின் உதவியை கோரியுள்ளது.
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களை மீட்க தெலங்கானா அரசு ராணுவத்தின் உதவியை கோரியுள்ளது.
ஹைதராபாத்தின் கச்சிபௌலி, நிஸாம்பெட், அல்வால், ஹகிம்பெட் உள்ளிட்ட இடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவத்தின் உதவியை தெலங்கானா அரசு கோரியுள்ளது.
அவர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட முன்வந்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளின் வரைபடங்கள் மற்றும் தகவல்கள் அவர்களிடம் தரப்படும் என்று கிரேட்டர் ஹைதராபாத் நகராட்சியின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீடுகளில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்கும்படி மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
Advertisement
ஆந்திராவில் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஹைதராபாத்தில் இயங்கும் கல்வி நிறுவனங்களுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.