புது தில்லி: ரயில்வே துறையில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து இன்று வெளியாகியுள்ள விபரத்தில்,
ரயில்வே துறையில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ரயில்வே துறையில் குரூப் சி, டி நிலை ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கான போனஸுக்கு ரூ.2,090,96 கோடி செலவாகும். இந்த போனஸ் மூலம் 12,60,000 ரயில்வே ஊழியர்கள் பயன் பெறுவர் எனத் தெரிகிறது.