பாகிஸ்தான் எல்லையையொட்டி உள்ள பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், "நாம் எதற்காக காத்திருந்தோமோ அது தற்போது நடந்துவிட்டது' என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பாராட்டு தெரிவித்தார்.
காஷ்மீரில் கி.பி. 950-இல் வாழ்ந்த தத்துவவியலாலரான ஆசார்ய அபிநவகுப்தாவின் 1,000-ஆவது பிறந்த தின விழா, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று மோகன் பாகவத் கூறியதாவது:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் எல்லையையொட்டி அமைந்திருந்த 7 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் பங்கேற்ற ராணுவ வீரர்களுக்கு பாராட்டுகள். நாம் எதற்காக காத்திருந்தோமா அது தற்போது நடந்து விட்டது என்று பாகவத் தெரிவித்தார்.