இந்தியா

கமல்ஹாசன் - பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு!

DIN

புதுதில்லி: தலைநகர் தில்லியில் நடிகர் கமல்ஹாசன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை திடீரென சந்தித்து பேசியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் ஜல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். தொடர்ந்து தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார்.

தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில், தலைநகர் தில்லியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, கமல்ஹாசன் திடீரென சந்தித்து பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பொன்.ராதாகிருஷ்ணனின் அலுவலகத்திற்கு வந்த நடிகர் கமல்ஹாசனை பொன்னாடை போர்த்தி வரவேற்றுள்ளார் அமைச்சர்.

இந்த சந்திப்பானது மரியாதை நிமித்தமானது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT