இந்தியா

ஹமீது அன்சாரி வரும் 24-இல் ஆர்மீனியா, போலந்துக்கு பயணம்

DIN

புது தில்லி: குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வரும் திங்கள்கிழமை (ஏப். 24) ஆர்மீனியா, போலந்து ஆகிய இரு நாடுகளுக்கு பயணம் தொடங்குகிறார்.
இதுதொடர்பாக, தில்லியில் வெளியுறவுத் துறைச் செயலர் பிரீத்தி சரண் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆர்மீனியா, போலந்து ஆகிய இரு நாடுகளில் வரும் திங்கள்கிழமை (ஏப். 24) முதல் 5 நாள்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
முதல்கட்டமாக, தில்லியிலிருந்து ஆர்மீனியா செல்லும் அவர் புதன்கிழமை (ஏப். 26) வரை அங்கு தங்கியிருப்பார். அப்போது அந்நாட்டின் அதிபர், பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்டோருடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக விவாதிப்பார்.
தொடர்ந்து யேரேவன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்களுடன் அவர் கலந்துரையாடுவார். பின்னர், அவர் போலந்துக்கு பயணம் மேற்கொள்வார். அங்கு அந்நாட்டின் அதிபர், பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசுவார்.
ஹமீது அன்சாரியுடன் அவருடைய மனைவி சல்மா அன்சாரி, மத்திய சிறு - குறு - நடுத்தர தொழில்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், எம்.பி.க்கள் சீதாராம் யெச்சூரி, டி.பி.திரிபாடி உள்ளிட்டோரும் உடன் செல்கின்றனர் என்றார் பிரீத்தி சரண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

SCROLL FOR NEXT