குஜராத்தின் 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக சார்பில் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா மற்றும் ஸ்மிருதி இராணி ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.
காங்கிரஸ் சார்பில் அகமது படேல் போட்டியிட்டார். பெரும் பரபரப்புகளுக்கு இடையே இம்மூவரும் மாநிலங்களவை உறுப்பினராக வெற்றிபெற்றனர்.
இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக பாஜக-வின் அமித்ஷா மற்றும் ஸ்மிருதி இராணி ஆகியோர் வெள்ளிக்கிழமை பதிவியேற்றனர்.
இவர்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு பதிப்பிரமாணம் செய்து வைத்தார்.
குஜராத் மாநிலத்தில் இதுவரை 5 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ள அமித்ஷா, தற்போது முதன்முறையாக மாநிலங்களை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவரது வருகை பாஜக-வுக்கு பலம் சேர்க்கும் என்று அக்கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.