இந்தியா

பன்றிக்காய்ச்சல் பாதித்த ராஜஸ்தான் மாநில பாஜக எம்எல்ஏ கிர்தி குமாரி மரணம்

DIN


ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மண்டல்கார் தொகுதியின் பாஜக எம்எல்ஏ கிர்தி குமாரி, பன்றிக் காய்ச்சலால் இன்று காலை உயிரிழந்தார்.

50 வயதாகும் கிர்தி குமாரிக்கு நேற்று இரவு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மின் சிங் மருத்துவமனையிலும், பிறகு அங்கிருந்து போர்டீஸ் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார்.

அவருக்கு 12 மருத்துவர்கள் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி இன்று காலை 7 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த கிர்தி, வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்றதாகவும், மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியும் அவர் மறுத்துவிட்டதால், வீட்டுக்கு மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளித்தும் குணம் அடையவில்லை. இறுதியில் உடல்நிலை மிக மோசமானதைத் தொடர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பயனில்லாமல் போனது என்றார் அவரது சகோதரர் போஜ்ராஜ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

கனவு, காலம்.. காவ்யா!

போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை: பிளிங்கன் பயணம் உதவுமா?

சௌதி அரேபியாவை புரட்டிப்போட்ட கனமழை - விடியோ

SCROLL FOR NEXT