துரந்தோ விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து
நாக்பூர்-மும்பை இடையே செல்லும் துரந்தோ விரைவு ரயில் திதிவாலாவிற்கு அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
மும்பை: நாக்பூர்-மும்பை இடையே செல்லும் துரந்தோ விரைவு ரயில் திதிவாலாவிற்கு அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
நாக்பூரில் இருந்து மும்பை செல்லும் இந்த ரயிலின் என்ஜின் மற்றும் 5 பெட்டிகள் நடைமேடை மீது மோதி தடம்புரண்டது. இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை என தொலைக்காட்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் செல்லும் ரயில் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதனையடுத்து கல்யாணில் இருந்து மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
இது கடந்த பத்து நாட்களில் நடந்த மூன்றாவது விபத்தாகும்.