இந்தியா

தமிழக முன்னாள் ஆளுநர் எஸ்.எஸ் பர்னாலா காலமானார்!

DIN

சண்டிகர்: தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருமான சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்.

பஞ்சாப் மாநில முதல்வரராக இருந்தவர் சுர்ஜித் சிங் பர்னாலா. இவர் தமிழகத்தின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். 1990-1991 மற்றும் 2004-2011 ஆகிய இரண்டு காலகட்டங்களில் தமிழகத்தின் ஆளுநராக அவர் பணிபுரிந்துள்ளார்.

லக்னோவில் சட்டம் பயின்ற அவர் இந்தியாவின் விடுதலைப்போராட்டத்திலும் பங்கேற்றவராவார். வாஜ்பாய் அமைச்சரவையில் ரசாயனத்துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

உடல்நலக் குறைபாடு காரணமாக சண்டிகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மாலை உயிரிழந்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT