இந்தியா

அசாமில்  நான்கு இடங்களில் குண்டு வெடிப்பு!

இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப்படுகின்ற வேளையில் அசாம் மாநிலத்தில் நான்கு இடங்களில்குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

DIN

கவுகாத்தி: இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப்படுகின்ற வேளையில் அசாம் மாநிலத்தில் நான்கு இடங்களில்குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

அசாமின் தில்புருகர், தின்சுகியா மற்றும் சராய்தியோ ஆகிய மாவட்டங்களில் உள்ள நான்கு இடங்களில் இன்று ஒரே நேரத்தில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன.        

இது தொடர்பாக செய்தியாளர்களிடம்பேசிய காவல் துறை அதிகாரி ஒருவர், 'இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களினால் எந்த விதமான உயிர் இழப்போ,பொருள் சேதமோ ஏற்படவில்லை. உல்பா தீவிரவாதிகள் குண்டுகளை தனியான இடங்களில் வைத்துள்ளனர். தங்கள் இருப்பை காட்டுவதற்காகவும், அச்சமூட்டுவதற்கும் செய்யப்பட்ட நிகழ்வு இது' என்று தெரிவித்தார்.

முன்னதாக நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் குடியரசு தின கொண்டாட்டங்களை புறக்கணிக்குமாறு உல்பா தீவிரவாதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி பண்டிகை: 6,630 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி

இருமல் மருந்து விவகாரம்: தமிழகத்தைச் சோ்ந்த ரங்கநாதனுக்கு 10 நாள் போலீஸ் காவல்!

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் தோ்வு: ஒத்திவைக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பணியாளா் நியமன முறைகேடு: மேற்கு வங்க அமைச்சா் சுஜித் போஸ் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

பருவமழைக்கு முன்பு வெள்ளத் தணிப்புப் பணிகள்: அமைச்சா் துரைமுருகன் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT