இந்தியா

அசாமில்  நான்கு இடங்களில் குண்டு வெடிப்பு!

இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப்படுகின்ற வேளையில் அசாம் மாநிலத்தில் நான்கு இடங்களில்குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

DIN

கவுகாத்தி: இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப்படுகின்ற வேளையில் அசாம் மாநிலத்தில் நான்கு இடங்களில்குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

அசாமின் தில்புருகர், தின்சுகியா மற்றும் சராய்தியோ ஆகிய மாவட்டங்களில் உள்ள நான்கு இடங்களில் இன்று ஒரே நேரத்தில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன.        

இது தொடர்பாக செய்தியாளர்களிடம்பேசிய காவல் துறை அதிகாரி ஒருவர், 'இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களினால் எந்த விதமான உயிர் இழப்போ,பொருள் சேதமோ ஏற்படவில்லை. உல்பா தீவிரவாதிகள் குண்டுகளை தனியான இடங்களில் வைத்துள்ளனர். தங்கள் இருப்பை காட்டுவதற்காகவும், அச்சமூட்டுவதற்கும் செய்யப்பட்ட நிகழ்வு இது' என்று தெரிவித்தார்.

முன்னதாக நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் குடியரசு தின கொண்டாட்டங்களை புறக்கணிக்குமாறு உல்பா தீவிரவாதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை! - ரஷிய அரசு தகவல்!

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

இந்திய-அமெரிக்க ஒப்பந்தம்: பங்குச் சந்தையில் ஆரவாரம்; நிஃப்டி 639 புள்ளிகளுடனும், சென்செக்ஸ் 2,073 புள்ளிகள் உயர்வு!

SCROLL FOR NEXT