இந்தியா

தில்லி பிளாட்பாரத்தில் உறங்கிய 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

DIN


புதுதில்லி: தலைநகர் தில்லியில் பிளாட்பாரத்தில் படுத்து உறங்கிய 8 வயது சிறுமி, துப்புரவு தொழிலாளி ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் தில்லியில் உள்ள கான்னாட் என்ற பகுதியில் வீடு இல்லாமல் அதிகம் பேர் பிளாட்பாரங்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அங்கு தூங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை அதே பகுதியில் துப்புரவு பணி செய்து வரும் நபர் ஒருவர் மறைவான இடத்திற்கு சிறுமியை தூக்கிச் சென்றுள்ளார்.

பின்னர் அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர், சிறிது நேரம் கழித்து சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். தப்பிச் சென்ற நபர் சிறுமியின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அறிமுகமான நபர் என கூறப்படுகிறது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த துப்புறவு தொழிலாளியை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய பிரதேசம்: 4 சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழப்பு

வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்

நெல் கொள்முதல் லஞ்சத்தை எதிா்த்தோரை கைது செய்வதா?: அன்புமணி கண்டனம்

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

SCROLL FOR NEXT