புதிய குடியரசுத்தலைவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியாவின் புதிய குடியரசுத்தலைவராகப் பதவியேற்றுள்ள ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியாவின் 14-ஆவது குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த செவ்வாய்கிழமை பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து அவருக்கு பிரமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவத்தார்.
இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:
இந்தியாவின் புதிய குடியரசுத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Advertisement
உங்களின் துவக்க உரையைக் கண்டு வியந்தேன். அதில் நீங்கள் தேசத்தின் பலம், ஜனநாயகம் மற்றும் ஒற்றுமை குறித்து சிறப்பாக பேசினீர்கள்.
நீங்கள் குடியரசுத்தலைவராக பதவியேற்றுக்கொண்டது, நம் இந்திய ஜனநாயகத்தில் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்துவிட்டது என்றார்.