இந்தியா

துணை ஜனாதிபதி தேர்தல்: வெங்கய்யா நாயுடுவுக்கு நேரில் சென்று முதல்வர் பழனிசாமி ஆதரவு!

வரும் மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிடும் வெங்கய்யா நாயுடுவுக்கு நேரில் சென்று முதல்வர் பழனிசாமி ஆதரவு தெரிவித்தார்.

DIN

புதுதில்லி: வரும் மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிடும் வெங்கய்யா நாயுடுவுக்கு நேரில் சென்று முதல்வர் பழனிசாமி ஆதரவு தெரிவித்தார்.

தில்லியில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி தில்லி சென்றிருந்தார். அவருடன் தமிழக அமைச்சர்களும் சென்றிருந்தனர். நிகழ்வு முடிந்த பின்னர், துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் மாநில அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி, துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வெங்கய்யா நாயுடுவை நேரில் சென்று சந்தித்தார்.

தனிப்பட்ட சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது பழனிசாமி கூறியதாவது:

மத்திய அமைச்சராக இருந்த வெங்கய்யா நாயுடு அவர்கள் தமிழகத்தின் மீது பற்றும் பாசமும் உடையவர். அத்துடன் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதையும், நட்புணர்வும் கொண்டிருந்தவர். அத்துடன் தென்னிந்நிதியாவைச் சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது கூடுதல் மகிழ்ச்சியினை அளிக்கிறது. அவருக்கு எங்கள்முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு பழனிசாமி பேசினார். அதிமுகவின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக வெங்கய்யா நாயுடு பின்னர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT