புதுதில்லி: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் உடனான சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் கம்பல் பகுதியில் சிஆர்பிஎப் 45-வது பட்டாலியன் முகாம் மீது இன்று காலை 3.45 மணியளவில் தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து இந்திய சிஆர்பிஎப் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். 6.15 மணி வரை நடைபெற்ற இந்த தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உயிரிழந்த 4 தீவிரவாதிகளிடமிருந்து பயங்கர ஆயுதங்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.
ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
தொடர்ந்து அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.