இந்தியா

ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

DIN

புதுதில்லி: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் உடனான சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் கம்பல் பகுதியில் சிஆர்பிஎப் 45-வது பட்டாலியன் முகாம் மீது இன்று காலை 3.45 மணியளவில் தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து இந்திய சிஆர்பிஎப் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். 6.15 மணி வரை நடைபெற்ற இந்த தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உயிரிழந்த 4 தீவிரவாதிகளிடமிருந்து பயங்கர ஆயுதங்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

தொடர்ந்து அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT