இந்தியா

10, 12 பொதுத்தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை: சிபிஎஸ்இ

DIN

பள்ளிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசிக்காமல் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ உயரதிகாரி ஒருவர் தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
பள்ளிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசிக்காமல் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது குறித்து முடிவெடுக்க இயலாது. இந்த யோசனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பல்வேறு ஆய்வுகளுக்கு உள்படுத்தப்படும். அதன்பிறகே இதுதொடர்பாக இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் விடைத்தாள்கள் திருத்தப்படுவதில் தவறுகள் நேரிடுவதாக சிபிஎஸ்இக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, அதுதொடர்பாக ஆய்வு செய்து அப்பிரச்னையைத் தீர்க்க ஆலோசனை வழங்குமாறு 2 குழுக்களை சிபிஎஸ்இ அமைத்தது.
அந்தக் குழுக்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை மார்ச் மாதத்தில் வழக்கம்போல் நடத்தாமல் பிப்ரவரி மாதத்திலேயே நடத்தலாம் என்று பரிந்துரை அளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

SCROLL FOR NEXT