பிகாரில் லாலு பிரசாத் பங்கேற்ற நிகழ்ச்சி மேடை சரிந்ததால் பரபரப்பு
பிகாரில் லாலு பிரசாத் யாதவ் பங்கேற்ற நிகழ்ச்சியின் மேடை சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாபிகாரில் லாலு பிரசாத் பங்கேற்ற நிகழ்ச்சி மேடை சரிந்ததால் பரபரப்பு
பிகாரில் லாலு பிரசாத் யாதவ் பங்கேற்ற நிகழ்ச்சியின் மேடை சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிகாரில் லாலு பிரசாத் யாதவ் பங்கேற்ற நிகழ்ச்சியின் மேடை சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிகார் மாநிலம், மேற்கு பாட்னாவில் உள்ள திகாவில் நேற்று நடந்த சமயம் தொடர்பான நிகழ்ச்சியில் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அப்போது பாரம் தாங்காமல் மேடையின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் லாலு பிரசாத் உட்பட மேடையில் இருந்து அனைவரும் கீழே விழுந்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தை அடுத்து லாலு பிரசாத் உடனே வீடு திரும்பினர்.
வீடு திரும்பியதும் அவருக்கு முதுகுப்பகுதியில் வலி ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் லாலு பிரசாத்துக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் வீடு திரும்பினார்.