புது தில்லி: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே உடல் நலக்குறைவால் இன்று தில்லியில் காலமானார். இந்நிலையில், அனில் மாதவ் தவே உயிரிழந்ததற்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
நண்பர் அனில் மாதவ் தவேயின் மரணத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நேற்று மாலை வரை கொள்ளை சிக்கல் குறித்து என்னுடன் பேசி வந்தார் தவே.
60 வயதாகும் அனில் தவே திருமணம் செய்து கொள்ளவில்லை. இளமை பருவம் முதலே அரசியலில் ஈடுபட முழு ஆர்வத்துடன் செயல்பட்டவர். சுற்றுச்சூழலைக் கவனித்து வந்ததில் தனிக்கவனம் செலுத்தி வந்த தவேயின் பணி என்றும் மறக்க முடியாதது.
பாரதிய ஜனதா கட்சியில் இருந்த இவர் முழு கவனத்துடனும், தெளிவுடனும் செயல்பட்டவர். இவரைப் பிரிந்து வாழும் இவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.