இந்தியா

கேரளம்: ஆர்எஸ்எஸ் தொண்டர் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

DIN

கேரளத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர் சூரக்காடு பிஜு கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை அந்த மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம், பையனூரைச் சேர்ந்தவர் ஆர்எஸ்எஸ் தொண்டரான சூரக்காடு பிஜு. அவர் தனது நண்பருடன் கடந்த 12-ஆம் தேதி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பிஜுவை அடையாளம் தெரியாத
நபர்கள் அடித்துக் கொலை செய்தனர்.
இந்தக் கொலை தொடர்பாக உள்ளூரைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் இருவர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பிஜு கொலை வழக்கு தொடர்பாக வி.ஜிதின், பி.சத்யன் ஆகிய இருவர், பையனூர் காவல் ஆய்வாளர் எம்.பி.ஆஸாத் முன்னிலையில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களுடன் சேர்த்து இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT