இந்தியா

டிச.18-ல் விஜய் மல்லையா நேரில் ஆஜராக தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

Raghavendran

அந்நியச் செலவாணி முறைகேடு வழக்கில் விஜய் மல்லையாவை குற்றவாளியாக அறிவிக்கக் கோரி தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தாக்கல் செய்தது.

இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், பிணையம் இல்லாத வாரன்ட் பிறப்பித்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுபோன்று விஜய் மல்லையா மீது இதே வழக்குத் தொடர்பாக 6 முறை வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுபோல இந்த வழக்கு தொடர்பாக அடுத்த 2 மாதங்களில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கும் தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், அந்நியச் செலவாணி முறைகேடு செய்த இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக டிசம்பர் 18-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தவறும் பட்சத்தில் இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக விஜய் மல்லையா அறிவிக்கப்படுவார் என்றும் எச்சரித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT