இந்தியா

உணவக ஒப்பந்த முறைகேடு வழக்கு: சிபிஐ முன் லாலு பிரசாத் ஆஜர்

DIN

உணவக ஒப்பந்த முறைகேடு வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத், தில்லி சிபிஐ முன் வியாழக்கிழமை ஆஜரானார்.
தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்துக்கு லாலு பிரசாத் தனது மகள் மிசா பாரதியுடன் காலை 11 மணியளவில் வந்தார். லாலுவை மட்டும் விசாரணைக்காக அதிகாரிகள் தனியறைக்கு அழைத்துச் சென்றனர் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
லாலு பிரசாதின் மகனும், பிகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், சிபிஐ முன் வெள்ளிக்கிழமை (அக்.6) ஆஜராகவுள்ளார்.
லாலு பிரசாத், கடந்த 2006-ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ராஞ்சி மற்றும் புரி ஆகிய இடங்களில் உள்ள ரயில்வே துறைக்குச் சொந்தமான உணவகங்களை நடத்துவதற்கு சுஜாதா ஹோட்டல் நிர்வாகத்துக்கு ஒப்பந்தங்களை வழங்கினார்.
அதற்கு கைமாறாக, அந்த ஹோட்டல் நிர்வாகத்தின் பினாமி நிறுவனமான டிலைட் மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தின் மூலமாக, 3 ஏக்கர் நிலத்தை லாலு பிரசாத் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, விசாரணை நடத்திய சிபிஐ, லாலு பிரசாத் தனது அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, லஞ்சம் பெற்றதாக வழக்குப் பதிவு செய்தது. 
மேலும், அவரது மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், சுஜாதா ஹோட்டல் குழும இயக்குநர்கள் விஜய் கோச்சார், வினய் கோச்சார், டிலைட் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் அப்போதைய மேலாண் இயக்குநர் பி.கே.கோயல் ஆகியோருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT