முகப்பு
இந்தியா

காவலர் நினைவு தினம் இன்று அனுசரிப்பு

நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவர்களின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் காவலர் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்படவுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவர்களின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் காவலர் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்தியா-திபெத் இடையேயான 2,500 மைல் தொலைவை, கடந்த 1959-ஆம் ஆண்டு வரை இந்திய காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லடாக் பகுதியில் கடந்த 1959-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி சீனப் படைகள் நடத்திய தாக்குதலில் இந்திய காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உயிர்த்தியாகம் செய்யும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர் நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்ûயும் பாதுகாப்பதற்காக, இதுவரை 34,408 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2016-17-ஆம் ஆண்டில் மட்டும் 383 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தில்லியில் ராஜ்நாத் சிங் தலைமையில் காவலர் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்படவுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →